4ஜி சிம்மில் 2ஜி சேவை; தவிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள்!
கோவை: ஏர்டெல் சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சரியாக சிக்னல் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்கிற்கு கால் செய்தால், இணைப்பு கிடைக்க நீண்ட நேரம் ஆகிறது.
இவ்வாறு குறுகிய கால அளவில், அதிக வாடிக்கையாளர்கள் மாறியதால் நெட்வொர்க் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்காலிக பிரச்சனை தான். 3 வாரங்களில் சரிசெய்யப்படும் என்றார்.
எப்போது பேசினாலும் நெட்வொர்க் பிஸி என்று தான் வருகிறது. எனவே வேறு நெட்வொர்க்கிற்கு மாற உள்ளோம் என்றனர்.
இதேபோல் தனியார் மொபைல் போன் நிறுவன அதிகாரி பேசுகையில், ஜியோவை போல் பிற நிறுவனங்களும் இலவச வாய்ஸ், எஸ்.எம்.எஸ், இண்டர்நெட் சேவை வழங்குகிறது.
நெட்வொர்க் டிராபிக் அதிகமாகும் இணைப்பில் பிரச்சனை ஏற்படுகிறது. இவற்றை சரிசெய்யும் முயற்சி விரைவாக நடைபெற்று வருவதாக கூறினார்.
4ஜி சிம்மில் 2ஜி சேவை மட்டுமே கிடைக்கிறது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள கோவை தொலைத்தொடர்புத் துறை இணை இயக்குநர், ஏர்செல் முடங்கியதால், அதிலிருந்து 32 லட்சம் பேர் ஏர்டெல்லுக்கும், 27 லட்சம் பேர் வோடாபோனுக்கு, 8 லட்சம் பேர் பிஎஸ்என்எல்லுக்கும் மாறியுள்ளனர்.
இதுகுறித்து பேசிய ஏர்டெல் வாடிக்கையாளர்கள், கவர்ச்சிகரமான வார்த்தைகளை கூறி ஈர்க்கும் ஏர்டெல் நிறுவனம், அடிப்படை தொழில்நுட்ப வசதிகளை ஏன் ஏற்படுத்தவில்லை.

No comments